ஏதோ ஒரு உறவின் அன்பான வார்த்தைக்காகவும் ஆறுதலுக்காகவும் காத்திருந்தது மனம்... அப்போழுதுதான் வந்தது பின்னாளில் என் உயிராக இருக்க போகும் என்னவளின் குருஞ்செய்தி... அவசியம் இருந்தால் மட்டும் பேசும் உறவுக்களுக்கு மத்தியில் அன்புக்காக பேசும் உன்னை எனக்கு தந்தார் கடவுள்.... உன் அன்பை அறியாமல் உன்னை தவிக்க விட்டேன் ஆனால் அதில் துளியும் சுயநலம் இல்லை... எண்ணில் தொலைந்த உன் நினைவுகளை எத்தனையோ முறை அப்புறப்படுத்தியும் முடியவில்லை.. பிறகு தான் உணர்ந்தேன் என் மொத்த வடிவமுமே உன் நினைவுகளால் ஆனது என்று.. நினைவின் வலியும், பிரிவின் மொழியும் நீ என்னை நீங்கி சென்ற பிறகு தான் உணர்ந்தேன்... எத்தனையோ சண்டைகள்.. அத்தனையும் விலக அல்ல விலகிவிடக்கூடாது என்பதற்காக... எனக்காக நீ கலங்கிய கண்ணீர்களின் வலிகள் வேதனைகள் அனைத்திற்கும் முடிவாக என் வாழ்கையை உனக்காகாவே அர்ப்பணித்திருக்கிறேன்.. உன்னை சந்தோசமாக வைத்திருக்கிறேன் என்பதை விட எனக்கு பெரிய சந்தோசம் வேறு எதுவுமில்லை...தங்கம் நாட்கள், வாரங்கள், மாதங்கள், வருடங்கள் என அனைத்